Friday, April 5, 2019

மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு



மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர். 

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர். 

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.  

பக்கம் 108 இல் நாவல் துறையிலும் சிறுகதைத் துறையிலும் பெயர் பெற்றவர் சுலைமா சமி இக்பால் அவர்கள். வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், ஊற்றை மறந்த நதிகள், நந்தவனப் பூக்கள், உண்டியல் ஆகிய நூல்களை வெளியி;ட்டுள்ளார். ஊற்றை மறந்த நதி என்ற அவரது நாவல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. இவரது கணவர் இக்பால் மௌலவி அவர்கள் எக்மி பதிப்பகத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வருபவர். இவர்களது மூத்த மகளான இன்ஷிராவும் (பக்கம் 242) ஒரு இலக்கியவாதி. தற்போது தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியராகக் கடiமாற்றும் இவர் பூ முகத்தில் புன்னகை, நிழலைத் தேடி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 112 இல் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது தனித்துவம் தனது நூல் வெளியீடுகளின் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தொகையை ஏழை மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நன்கொடையாகக் கொடுத்து தனது மறுமை வாழ்வுக்காக நன்மையைப் பெற்றுக் கொள்வதே. அவர் பலருக்கும் உதவக் கூடிய இளகிய மனம் படைத்தவர். ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 153 இல் புன்னியாமீன் என்றமா பெரும் இலக்கியவாதியின் மனைவியான மஸீதா புன்னியாமீன் அவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் காலியைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட கணித விஞ்ஞான ஆசிரியர். புதிய மொட்டுக்கள், ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகள் (கூட்டு முயற்சி), மூடு திரை ஆகிய நூல்களோடு கல்வி சார்ந்த பல நூற் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

குருநாகலை மல்லவப்பிட்டியைச் சேர்ந்த சுமைரா அன்வர்; பற்றிய தகவல்கள் பக்கம் 158 இல் இடம்பிடித்துள்ளது. சுமைரா அன்வர்; ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியர். இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற இவரது நாவல் இன்னும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த நாவலாசிரியை ஸனீரா காலிதீன் அவர்கள் பற்றிய தகவல்கள் பக்கம் 190 இல் காணப்படுகிறது. ஒரு தீபம் தீயாகிறது,  அலைகள் தேடும் கரை என்ற இரு நாவல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ள இவர், களுத்துறை முஸ்லிம் மகளிர் கலலூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

பக்கம் 234 இல் கண்டி தெஹிதெனிய மடிகேயைச் சேர்ந்த மரீனா இல்யாஸ் ஷாபியின் தகவல்கள் நூலை அலங்கரித்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாபி ஓய்வுபெற்ற ஆசிரியராவார். கட்டுரை, சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர். தற்போது நியூசிலாந்தில் வாழும் இவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர் பிறை நிகழ்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். 

மின்னும் தாரகைகள் என்ற இந்த நூலில், ''நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..'', ''புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்..'' மற்றும் ''பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்'' ஆகிய தலைப்புகளில்தான் நூலின் மூன்று அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். கோடிட்டுக் காட்டக்கூடிய சில முக்கியமானத கவல்களையும் ஷஷமின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்|| என்ற தலைப்பில் அவற்றை நூலாசிரியர் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதுவரை இலக்கியம் படைத்திருந்தாலும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகமில்லாத பலர், மின்னும் தாரகைகள் என்ற இந்நூலின்; மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இத்தகையதொரு ஆத்மார்த்தமான சேவையைச் செய்திருக்கும் நூலாசிரியர் நூருல் அயினுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது கணவர் கவிமணி நஜ்முல் ஹூசைன் அவர்கள்.

இனிமையான தம்பதியராகவும், இலக்கியத் தம்பதியராகவும் திகழும் இவர்கள் எனது நூல் வெளியீடுகளிலும் கலந்துகொண்டு என்னை கௌரவித்து இதயம் மகிழ்பவர்கள். மக்களளோடு ஐக்கியமாகப் பழகக் கூடிவர்கள். மென்மேலும் இலக்கியப் பணியாற்ற எனது வாழ்த்துப் பூக்கள் என்றென்றும் இவர்களுக்கு உண்டு!!!

நூல் - மின்னும் தாரகைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - நூருல் அயின் நஜ்முல் ஹுசைள்
விலை - 1000 ரூபாய்
வெளியீடு - ஸல்மா பதிப்பகம்

Sunday, March 31, 2019

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.

இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.

அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.

''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.

இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது. 

இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்''  என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கியின் நிழலில்
என்னைஅமரச் செய்து
என் கையில் 
பிரித் நூலைக் கட்டினர்...
அவர்களிடம் 
விசிறிகளுக்கு பதிலாக 
அல்குர்ஆன் இருந்தது.. 
..அங்கொன்றும் இங்கொன்றுமாக 
அதில் பிழைகண்டனர்..

பால் அம்மா (பக்கம் 04) என்ற கவிதை ஆகுமாக்கபட்ட உணவுகளை பசுவதை என்ற பெயரில் தடுத்துக்கொண்டிருக்கும் கும்பலின் இழிசெயல் பற்றிப் பேசுகின்றது. குவியல் குவியலாக மக்கள் இறந்துபோன இந்த நாட்டில் உணவுக்காக மாடுகளை அறுப்பது பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றவர்களைச் சாடி நிற்கின்றது இந்தக் கவிதை.

எத்தனையோ
எமது அம்மாக்களை
சும்மாக்கள் என்று
சுட்டுத் தள்ளியவர்கள்
ஷஷகிரி|| அம்மாவின்
முலையில் வாய் வைத்து
தாய்ப் பால் குடித்ததாய்க் கூறி
தமக்குத் தாமே 
தீ மூட்டிக் கொள்கின்றார்கள்..

இன்பமயமான கதைகளைக் கேட்டுவளர வேண்டிய எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்த வரலாற்றைப் பரிசளித்த தேசம் நம்முடையது. போர்க் காலத்தில் நடந்த அவலங்களின் எச்சசொச்சம் இன்னும் வடுக்களாக காணப்படுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஒரு பெருங்கூட்டம் இன்னும்கூட கையறு நிலையில் தம் காலத்தைக் கடத்துகின்றது. அத்தகையவர்களுக்காய் எழுதப்பட்ட கவிதையாக மொழிபெயர்க்கப்படாத வலிகள் (பக்கம் 25) காணப்படுகின்றது.

நிறம் மாறிய தேசத்தில்
நீதி மறுக்கப்பட்ட
யாருக்கும் புலப்படாத
மௌன ஜீவன்களின்
ஒவ்வொரு விடியலும்
வலி சுமக்கும் முடிவுகளில்

அப்பாவிகளாய் திக்கற்றுத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளுக்காக துணிந்து வந்து குரல் கொடுத்திருக்கும் ஒரு வைத்தியக் கவிஞன் அஸாத் எம். ஹனிபா அவர்கள். சாத்வீகப் போராட்டங்களால் பெறமுடியாத உரிமைகளால் துவண்டு போய்க் கிடக்கும் மக்களுக்காகக் கிடைத்த ஒரு புரட்சியாளன் இவர். இவரது இலக்கியப் பணியும் சமூகப் பணியும், வைத்தியப் பணியும் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!

நூல் - தம்பியார்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அஸாத் எம். ஹனிபா
வுpலை - 400 ரூபாய்
வெளியீடு - ஏ.ஜே. பதிப்பகம்